எதுக்காக கிரெடிட் கார்டு?

எதுக்காக கிரெடிட் கார்டு?


முதலாவது நாடு இருக்கும் நிலைமையில் ஓரளவுக்கு மேல கையில பணத்தை எடுத்துக்கிட்டு போறது அத்தனை பாதுகாப்பாக இல்லை. லாரியிலே கொண்டு போனாலே வழிமறிச்சு கொள்ளை அடிச்சுட்டுப் போயிடுற காலமா இருக்கு. அதேசமயம், பொருட்களை வாங்காமலும் இருக்கமுடியாது. அந்த மாதிரி சமயத்துலதான் கிரெடிட் கார்டுங்கறது ரொம்ப பிரயோஜனமா இருக்கும். பர்ஸூல கார்டைச் செருகிட்டுப் போனோமா... பொருளை வாங்கினோமானு வந்திடலாம்.

அடுத்ததா பார்த்தீங்கன்னா, கடனுக்கு ஒரு பொருளை வாங்கும்போது அதுக்கான வட்டியைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே கிரெடிட் கார்டில் வாங்கினால் குறிப்பிட்ட காலத்துக்கு அதை வட்டியில்லாக் கடனா பயன்படுத்த முடியும். ஆனா, இப்படிச் செய்யும்போது கவனமா இருக்கணும். ஏன்னா, கிரெடிட் கார்டுங்கறது கத்தி மாதிரி... கொஞ்சம் அசந்தா நம் கையைப் பதம் பார்த்துரும்.

முன்னெல்லாம் வங்கிகள் மட்டும்தான் கிரெடிட் கார்டை கொடுத்தன. இப்போ தனியார் நிதி நிறுவனங்கள், சேவை மையங்கள் எல்லாம் கூட கார்டுகளை தருகின்றன. வங்கிக்கு வங்கி, கார்டுக்கு கார்டு வித்தியாசம் இருக்கு. சிலர் சர்வீஸ் சார்ஜ் குறைவாப் போடுவாங்க. சில கார்டுகளுக்கு அதை எல்லாக் கடைகளிலும் பயன்படுத்தலாம்ங்கற வசதி இருக்கும். வேறு சில கார்டுகளுக்குக் கடைகள்ல நிறைய சலுகை கிடைக்கும். இதையெல்லாம் கவனிச்சு, எது நமக்கு நல்ல பலன் தருமோ அந்த கார்டை வாங்குறதுதான் சரியா இருக்கும்.