மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்

மின்னணு பணமாற்றம் - எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்ஃபர்


காசோலைகள் போன்ற எந்த விதமான காதித ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளின் கணினிகள் மூலமாகவே பணமாற்றம் நடைபெறுவது எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர் எனப்படுகிறது.  இவை பணமாற்றத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகின்றன. எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் காசோலையோ வேறு விதமான காதிதமோ கிடையாது.

இதனால் தொகையை மாற்றியோ பெயரை மாற்றியோ பணம் கையாடல் செய்யக்கூடிய வாய்ப்புகள் குறைவு. மின்னணு முறையில் பணம் கொடுக்க வாங்க வேண்டிய செய்தி பரிமாறப் படுவதால் கடிதக் காசோலை போன்று  ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போய் சேர ஆகும் நேரம் மிச்சமாகிறது. காசோலை உபயோகிக்கும் போது பணம் பெறுபவர் காசோலையைத் தன்னுடைய வங்கியில் வைப்பு செய்து பணப் பா¢மாற்றத்தைத் துவக்க வேண்டும்.

ஆனால்எலெக்ட்ரானிக் டிரான்ஸ்ஃபர்களில் பணம் அனுப்புபவர் தன்னுடைய வங்கிக்குப் பணமாற்றத்துக்கான ஆணையைக் கொடுத்தால் அவ்வங்கி அவருடைய கணக்கிலிருந்து பணம் எடுத்து பணம் பெறுபவருடைய வங்கியின் கணக்கில் சேர்ப்பிக்கும். இது பணம் பெற வேண்டிய வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். பணம் பெறுபவர் செய்ய வேண்டுவது ஒன்றுமே இல்லை.

என் ஈ எஃப் டி எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 2 லட்சம் வரையான பணமாற்றங்களுக்கு இம்முறையே பயன்படுகிறது. பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஒரு நாளில் ஆறு அல்லது ஏழு முறை இதற்கான கிளியரிங் ரிசர்வ் வங்கியில் செயல்படுகிறது. பணமாற்றம் செய்பவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவா¢ன் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் செய்யப்படுகிறது. கிளியரிங் முடிந்த உடன் பெற வேண்டியவான கணக்குக்கு பணம்  போய்ச்சேருகிறது. சில மணி நேரங்களில் பணம் போய்ச்சேரும்.

ஆர் டி ஜி எஸ் எனப்படும் டிரான்ஸ்ஃபர் முறை ரூ. 2 லட்சத்துக்கு மேலான பணமாற்றங்களுக்குப் பயன்படுகிறது. என் ஈ எஃப் டி போலவே இதிலும் பணம் அனுப்புபவர் வங்கி சென்றோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக்கு பணமாற்றத்துக்கான ஆணை கொடுக்கலாம். ஆனால், வேறுபாடு என்னவென்றால் என் ஈ எஃப் டி போல் அல்லாமல் இம்முறையில் கிளியரிங் அவ்வப்பொழுது செயல்படுவதில்லை. பணம் அனுப்புபவரின் வங்கியின் கணக்கிலிருந்து பணம் பெறுபவரின் வங்கியின் கணக்குக்கு பணமாற்றம் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபருக்கும் ஒவ்வொரு முறை தனித்தனியாக செய்யப்படுகிறது. இதனால் கால தாமதம் இல்லாமல் உடனுக்குடன் பெற வேண்டியவரின்  கணக்குக்குப் பணம் போய்ச்சேருகிறது.

சில சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் பலருக்குப் பணம் அனுப்ப நேரிடலாம். சம்பளப் பட்டுவாடா, பங்குதாரர்களுக்கு லாபத்திலிருந்து டிவிடெண்ட் பட்டுவாடா போன்றவை செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பண மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.



இ சி எஸ் (கிரெடிட்) எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியாரிங் சர்வீஸ் முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய வங்கிக்குப் பணம் பெற வேண்டியவர்களின் கணக்கு எண், வங்கிக் கிளை எண், அனுப்ப வேண்டிய தொகை போன்றவற்றைப் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டால் நம் வங்கி பணம் பெற வேண்டியவர்களின் வங்கிக்கு இந்த விவரங்களையும், மொத்தத் தொகையையும் அனுப்பி வைக்கிறது. சம்பந்தப்பட்ட வங்கிகள் பணம் பெற வேண்டியவர்கள் கணக்கில் வைப்பு செய்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் இதற்கு மாறாக பலர் ஒரே நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இ ஸி எஸ் (டெபிட்) முறையில் இதைச் செய்யலாம். நம்முடைய மாதாந்திர பில் தொகையைப் பொருத்து பில்லின் ஒரு உச்ச வரம்பை நாமே நிர்ணயிக்க வேண்டும்.

நம்முடைய வங்கிக்கு நம் கணக்கில் இந்த உச்சவரம்புத் தொகை வரை ஒவ்வொரு முறையும் நம்மைக் கேட்காமல் எடுக்க இசைவு அளிக்க வேண்டும். இந்த இசைவின் நகலை வங்கியின் ஒப்பத்தோடு தொலைபேசி, மின்சார வாரியம்  போன்ற கட்டணம் பெற வேண்டிய நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இந்நிறுவனங்கள் மாதந்தோறும் நம்மைத் தொந்தரவு செய்யாமல் தாமே நம் வங்கிக்கு அந்த மாதம் செலுத்த வேண்டிய தொகையைத் தெரிவிப்பார்கள். நம் வங்கியும் தொகை நாம் அங்கீகரித்த வரம்புக்குள் இருந்தால் நம்முடைய மறு இசைவு தேவை இன்றி பணம் பெற வேண்டிய நிறுவனங்களின்  வங்கிகள் வழியாக அந்தத் தொகையைச் செலுத்தி விடும்.    

இம்முறையில் பில் கட்டணம் சில மாதங்கள் அதிகமாக இருந்தாலும் நம்முடைய கணக்கில் இருந்து எடுத்த பின்னரே தெரிய வருவது ஒரு குறைபாடு. எனினும் எடுக்கும் தொகைக்கு ஒரு வரம்பு உள்ளதாலும், நம்பிக்கைக்குய நிறுவனங்களுக்கே இது போன்ற இசைவு கொடுக்கப்படுவதாலும் பெரும் அளவில் தவறு நடக்க வாய்ப்பில்லை.