ஃபண்ட் முதலீடு: அதிக லாபம் பார்க்க வழி என்ன?

ஃபண்ட் முதலீடு: அதிக லாபம் பார்க்க வழி என்ன?


 வங்கி ஆர்.டி. போல தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருவது, எஸ்.ஐ.பி. அதாவது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். இது மூலமாக மாசம் குறைந்தபட்சம் நூறு ரூபாய் கூட முதலீடு செய்யலாம்.

தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்றதால மார்க்கெட்டோட ஏற்ற, இறக்கத்தை சமன் செஞ்சு, சீரான லாபத்தை பெற முடியும். இதுதான் எஸ்.ஐ.பி-யோட ஸ்பெஷல்! மாதச் சம்பளக்காரங்களுக்கு ரொம்ப ஏற்ற முறை!

வரிச் சலுகைக்காகவே உள்ள இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செஞ்சா, அதுக்கு வருமான வரி பிரிவு 80- சி கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை உண்டு.

மார்க்கெட் சரிஞ்சிருக்கும்போது நல்ல ஃபண்டுகளின் என்.ஏ.வி. குறைவாக இருந்தால் வாங்கலாம். அதுமூலமா கூடுதல் யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிறகு சந்தை ஏறும் போது அதிக லாபம் கிடைக்கும்..

பணத்தை ஒரே ஃபண்டில் போட்டுக் குவிக்காமல் பலவிதமான ஃபண்டுகள்ல பிரிச்சு முதலீடு செய்யறதுதான் புத்திசாலித்தனம். காரணம் ரிஸ்க் குறையும்ங்கிறதுதான்.

ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது போட்ட பணம் என்னாச்சுனு எட்டிப் பார்த்துடறது உத்தமம். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் போட்டிருந்தால், மார்க்கெட் ஏறும்போதும் இறங்கும்போதும் ஃபண்ட் மேல ஒரு கண் வச்சிருக்கணும். பணத்தைப் போட்டுட்டு ஒரு சில மாசங்களிலேயே திரும்ப எடுத்தா, வெளியேறும் கட்டணம் இருக்கும். அதனால ஒரு ஸ்கீம்ல இருந்து வெளியேறுகிறோம்னா அதுக்கு முன்னாடி இந்தக் கட்டணங்கள் எல்லாம் போக, லாபம் மிஞ்சுதானு பார்த்துட்டுதான் வெளியேறணும்.

மியூச்சுவல் முதலீட்டில் லாபத்தை டிவிடெண்டா பிரிச்சுக் கொடுப்பாங்க. இதுக்கு வரி கிடையாது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஒரு வருஷம் கழிச்சு எடுத்தால், அதுக்கும் வரி கிடையாது. ஆனால், அதுக்கு முன்னால் எடுத்தால் 15 சதவிகிதம் வரி உண்டு.