குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி?
how-open-bank-accounts-children



            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                        Click Here : Register for free
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

குழந்தைகளுக்கான வங்கி கணக்கை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவுவதோடு, அவர்களுக்குப் பணம் மேலாண்மை பற்றிய அடிப்படையைக் கற்றுக்கொடுக்கவும் உதவுகின்றன. இத்தகைய வங்கிக் கணக்குகள் மைனர் கணக்குகள் என்று வகைப் படுத்தப்படுகின்றன. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் மைனர் என்று அழைக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்? மைனரின் சார்பாக அவரின் காப்பாளர். மைனருடன் கூட்டாகச் சேர்ந்து அவரின் காப்பாளர் மைனரின் சார்பாக அவரின் சட்டப்பூர்வ காப்பாளர். 10 வயதிற்கு மேல் இருக்கும் மைனர் ஆண் அல்லது பெண் , அவரின் பெயரில் அவரால் இயக்கப்படும் ஒரு கணக்கு

படிவம் : வழக்கமான கணக்குத் திறப்புப் படிவம் பூர்த்திச் செய்து, இந்த மைனர் கணக்கை திறக்கலாம். மைனரின் பெயர், முகவரி, பாதுகாவலர் விவரங்கள் மற்றும் கையொப்பம் போன்ற விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஆவணங்கள் : கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மைனரின் பிறப்புச் சான்றிதழ் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் கேஒய்சி ஆவணம். இது காப்பாளரின் KYC ஆவணமாக இருக்க வேண்டும். மைனரின் ஆதார் அட்டை. காப்பாளரின் மாதிரி கையொப்பம். 10 வயதிற்கு மேல் உள்ள மைனர் என்றால், அவரின் மாதிரி கையொப்பம்.

கணக்கின் செயல்பாடு: 10 வயதிற்குக் குறைவாக இருக்கும் மைனர், என்றால் அவரின் வங்கிக் கணக்கை அவருடைய காப்பாளர் நிர்வகிக்கலாம் . 10 வயதிற்கு மேல் உள்ள மைனர், அவருடைய வங்கி செயல்பாட்டை அவரே நிர்வகிக்கலாம்.

18 வயதிற்குப் பின்: மைனருக்கு 18 வயது முடிந்தவுடன், அவரின் வங்கிக் கணக்கு வழக்கமான சேமிப்பு கணக்காகக் குறிக்கப்படுகிறது. இனி, காப்பாளர் இவருடைய வங்கிக் கணக்கை நிர்வகிக்க இயலாது. மைனர், மேஜர் ஆனதற்கான சான்றை மற்றொரு கே ஒய் சி படிவத்துடன் இணைத்து வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கவணிக்க வேண்டியது : ஒவ்வொரு வங்கிக் கணக்கின் தினசரி பரிவர்த்தனை வரம்புகளை வங்கிகள் நிர்ணயித்துள்ளன, மற்றும் பெற்றோர்களிடமிருந்தான பரிவர்த்தனை வரம்புகளைச் சரிபார்க்க, சிறார்களின் கணக்குகளில் கூடுதல் பரிவர்த்தனை வரம்புகளை அனுமதித்திருக்கிறது